தீயில் கருகி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

தீயில் கருகி 2 இளைஞர்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஜம்புநாதபுரத்தை அடுத்த கிளியனூர்பட்டியைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி மகன் பிரபு(17), பெருமாள் மகன் சக்திவேல்(23). இவர்கள் இருவரும் கடந்த 9-ம் தேதி இரவு கொசுவை விரட்டுவதற்காக சக்திவேலின் வீட்டுக்குள் செடிகளைக் கொண்டு புகைமூட்டம் போட்டுள்ளனர்.

அப்போது அந்த செடிகளை எரிய வைப்பதற்காக அவற்றின் மீது பெட்ரோலை ஊற்றியபோது திடீரென பிரபு மீது தீப்பற்றிக் கொண்டது. இதில், பிரபுவை காப்பாற்ற முயன்றபோது சக்திவேல்(23) மீதும் தீப்பிடித்தது.

படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு நேற்று முன்தினமும், சக்திவேல் நேற்றும் உயிரிழந்தனர். இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in