கிராம உதவியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கிடுக

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கிராம உதவியாளர் சங்க இணைப்பு விழாவில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசும் சங்க நிர்வாகிகள்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கிராம உதவியாளர் சங்க இணைப்பு விழாவில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசும் சங்க நிர்வாகிகள்.
Updated on
1 min read

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர் தல் பணியில் ஈடுபடுத்தப்படும் கிராம உதவியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் கூடுதலாக வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற கிராம உதவியாளர் சங்க இணைப்பு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க இணைப்பு விழா நேற்று கள்ளக்குறிச்சியில் அதன் மாநிலத் துணைச் செயலாளர் கே.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், எதிர் வரும்சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் கிராம உதவியாளர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் கூடுதலாக வழங்க வேண்டும். மண்டல வாரியாக கிராம உதவியாளர்களுக்கு 30 சதவீதம் பதவி உயர்வு வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்தை அமல் படுத்த வேண்டும்.

பதவி உயர்வுக்கான பணி மூப்பை 10 ஆண்டிலிருந்து 6 ஆண்டாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in