Published : 11 Jan 2021 03:25 AM
Last Updated : 11 Jan 2021 03:25 AM

மணல் கடத்தலை தடுக்க முயன்ற தலைமைக் காவலர் மீது தாக்குதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மூக்கையூர் ஆற்றில் மணல் கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தலைமைக் காவலர் செந்தூர்பாண்டி, காவலர் சக்திகணேஷ் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது மணல் கடத்தி வந்த டிராக்டரை டூவீலரில் விரட்டிச் சென்று தலைமைக் காவலர் மடக்க முயன்றார். அப்போது டிராக்டரில் இருந்த ஒருவர், தலைமைக்காவலரைத் தாக்கி கண்ணில் மண்ணை வீசினார். இதில் நிலைதடுமாறிய தலைமைக் காவலர் கீழே விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தலைமைக் காவலர் செந்தூர்பாண்டி புகாரின் பேரில் எஸ்.நோம்பக்குளத்தைச் சேர்ந்த வினித்முருகன், மேலச்செல்வனூரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் 2 பேர் என 4 பேர் மீது சாயல்குடி போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x