மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற பிப்ரவரி 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற பிப்ரவரி 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்ததப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை முதல் கட்டமாக 100 மாணவ, மாணவியருக்கு 2019-2020-ம் கல்வி ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

2020-21ம் கல்வி ஆண்டுக்கு இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ, மாணவி கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர், பிற்படுத்தப்பட் டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை -5, தொலைபேசி எண் - 044- 28551462. மின்னஞ்சல் முகவரி- tngovtiitscholarship@gmail.com இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

தகுதியான மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in