Published : 11 Jan 2021 03:26 AM
Last Updated : 11 Jan 2021 03:26 AM

சேத்துப்பட்டில் தேமுதிக ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை: போளூர் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் நடைபெற்றது.

தொகுதி பொறுப்பாளர் மாதவன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சங்கர், இளைஞரணி துணை செயலாளர் தினகரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். வடக்கு மாவட்டச் செயலாளர் கோபிநாதன், மாவட்ட அவைத் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் ஏகாம்பரம் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், “சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு பணி செய்வது, அனைத்து கிராமங்களிலும் பூத் கமிட்டி அமைப்பது” உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்டப் பொருளாளர் ஜான்பாஷா, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேஷ், அஞ்சலை, ஒன்றியச் செயலாளர்கள் சரவணன், குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x