ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 32-வது நாள் போராட்டத்தில் முகமூடி அணிந்து எதிர்ப்பு

சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கேள்விக்குறி முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கேள்விக்குறி முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

சிதம்பரம் ராஜா முத்தையா மருத் துவக் கல்லூரி மாணவர்கள், தங்கள்கல்லூரியில் கூடுதலாக வசூலிக் கும் கட்டணத்தை நிறுத்தி, அரசு கட்டணத்தை வசூலிக்கக்கோரி நேற்றுடன் 32 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் முகமூடி அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை தமிழக அரசு ஏற்ற பிறகு மாணவரிடம் அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்காமல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை கண்டித்து மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினம் தினம் கவனத்தை ஈர்க்கும் விதமாக பல்வேறு விதமான நூதனப் போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்கள் நேற்று 32 வது நாளாக கேள்விக்குறியுடன் முகமூடி அணிந்து பல் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டி நாங்கள் தொடர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அரசு கட்டணத்தை வசூல் செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in