பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தர்ணா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தர்ணா
Updated on
1 min read

ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் லூர்துபெலிக்ஸ் ஸ்டீபன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் கணேசன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தொடர்ந்து, 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி, பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, மாரிச்சாமி, தேவராஜ், பொருளாளர் தமிழ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in