மின்சாரம் பாய்ந்து இளைஞர் காயம்; உறவினர்கள் மறியல்

மின்சாரம் பாய்ந்து இளைஞர் காயம்; உறவினர்கள் மறியல்
Updated on
1 min read

கரூர் அருகேயுள்ள பள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் கோபி(25). பொறியியல் பட்டதாரியான இவர் பெயின்டராக வேலை செய்து வந்தார்.

கரூர் சுக்காலியூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கடந்த 6-ம் தேதி பெயின்ட் அடித்துக் கொண்டிக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கோபி படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் கோவை தனியார் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கோபி வேலை பார்க்கும் தனியார் நிறுவன உரிமையாளரை கண்டித்து கோபியின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் என 100-க்கும் மேற்பட்டோர் கரூர் திருகாம்புலியூர் ரவுண்டானாவில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு, சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in