விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

வைரிச்செட்டிப்பாளையத்துக்குச் செல்லும் காற்றுக் கொட்டகை வெள்ளாளர் குட்டை பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி துறையூர் வட்டாட் சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் கள் உப்பிலியபுரம் முத்துகுமார், துறையூர் ஆனந்தன், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடிவு எடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in