‘கோயில் சொத்துக்களின் ஆவணங்கள் அழிப்பு’

‘கோயில் சொத்துக்களின் ஆவணங்கள் அழிப்பு’
Updated on
1 min read

தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களின் ஆவணங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டுள்ளன என திருத்தொண்டர் சபை நிறுவனத் தலைவர் ஆ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் அவர், செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: தமிழகம் முழுவதும் 5 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் பறிபோய் உள்ளன. இந்த நிலங்களை வருவாய், நில அளவீடு, பத்திரப்பதிவு, உள்ளாட்சி ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து மீட்க போராடுவோம்.

பெரும்பாலான கோயில்களுக்கு சம்பந்தமான சொத்துக்கள் எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை. அவற்றின் ஆவணங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்.

கோயில் புறம்போக்கு நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாது. இவற்றை மீட்க வேண்டும். கோயில் நிலங்கள் மீட்பு விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு பயந்தே அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட ஆதாயத்தை கருத்தில் கொண்டே செயல்படுகின்றனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in