1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 17-ம் தேதி வழங்க நெல்லை ஆட்சியர் ஆலோசனை

1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 17-ம் தேதி வழங்க நெல்லை ஆட்சியர் ஆலோசனை
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி நடைபெறும் தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில், 1.35 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரித்தார்.

போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவது தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியர் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து போலியோ தாக்கம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் நாடு முழுக்க வரும் 17-ம் தேதி ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்படவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள முகாம்களின் வாயிலாக 1.35 லட்சம் குழந்தைகள் பயனடைவர். இதற்காக கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் 1,642 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த 2 நாட்கள் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்குவார்கள் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன், மாநகர் நல அலுவலர் சரோஜா, மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in