குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்கக் கோரி  பொதுமக்கள் சாலை மறியல்
Updated on
1 min read

பெரம்பலூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட் டனர்.

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே எம்ஜிஆர் நகர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனவும், இது குறித்து நக ராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் செய் தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பெரம்பலூர்- துறையூர் சாலை யில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in