5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 3 பேர் சிக்கினர்

5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 3 பேர் சிக்கினர்
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் புவனேஸ்வரி நகரில் அரிசி ஆலை வைத்திருப்பவர் தியாகராஜன். இவரது அரிசி ஆலை வளாகத்தில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி.யின் தனிப்படை போலீஸா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப் இன்ஸ் பெக்டர் நாகராஜ் மற்றும் போலீஸார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில், 85 மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ரங்கராஜ் (58), கார்த்திக் (28), மில் உரிமையாளர் தியாகராஜன்(58) ஆகியோரை பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in