காஞ்சிபுரம் மாவட்ட காங். புதிய தலைவர் பொறுப்பேற்பு கட்சியைப் பலப்படுத்த யாத்திரை நடத்த முடிவு

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற அளவூர் நாகராஜனை வரவேற்கும் தொண்டர்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற அளவூர் நாகராஜனை வரவேற்கும் தொண்டர்கள்.
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக அளவூர் நாகராஜன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது 'ஊர் தோறும் காங்கிரஸ், இல்லம் தோறும் கை சின்னம்' என்ற யாத்திரை மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அளவூர் நாகராஜன் காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள காமராஜர், காந்திசிலைகளுக்கு மாலை அணிவித்தார். முக்கிய வீதிகள் வழியாக தனது தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த அவரை அக்கட்சியினர் வரவேற்றனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் மூலம் இந்தியாவில் நல்லாட்சி நடைபெற்றது. ஆனால், மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த 'ஊர் தோறும் காங்கிரஸ், இல்லம் தோறும்கை சின்னம்' என்ற யாத்திரையை நடத்த உள்ளேன்" என்றார்.

இவருடன் மாநிலச் செயலர் எஸ்.டி.நெடுஞ்செழியன், தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர்கள் விஜயகுமார், பத்தன், முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஆர்.வி.குப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in