இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் கைது

இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் கைது
Updated on
1 min read

மோகனூர் இளைஞர் கொலை யில் தொடர்புடைய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூரைச் சேர்ந்தவர் சசிக்குமார் (24). இவர் கரூரில் உள்ள காகித ஆலையில் தினக் கூலி அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மலர்மன்னன் (35) என்பவருக்கும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 1-ம் தேதி இரவு மோகனூர் ரயில் நிலையம் பின்புறம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மலர்மன்னன், அவரது நண்பர்கள் ரஞ்சித் (27), பிரகாஷ் (24) ஆகியோர் சசிக்குமாரை தாக்கி கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மோகனூர் காவல் துறையினர் மலர்மன்னன், ரஞ்சித், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in