வேளாளர் உரிமை மீட்பு குழு ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

வேளாளர் பெயரை வேறு சமூகத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் வேளாளர் உரிமை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாளர் பெயரை வேறு சமூகத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் வேளாளர் உரிமை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

வேளாளர் பெயரை வேறு சமூகத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் வேளாளர் உரிமை மீட்பு குழுவினரும், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை யினரும் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரவையின் மாநில பொதுச் செயலாளர் சூரியமூர்த்தி தலைமை வகித்தார். மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் கே.கே.சி.பாலு முன்னிலை வகித்தார்.

வேளாளர் என்ற பெயரை வேற்று சமூகத்துக்கு வழங்கக் கூடாது, வேளாளர் பெயர் மாற்றத் துக்கு பரிந்துரை செய்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பப்பட்டது

மாவட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், ஈஸ்வரமூர்த்தி, சிவராஜ், பாலு, மத்திய மண்டல மாணவரணி செயலாளர் லோகு மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in