Published : 02 Jan 2021 03:25 AM
Last Updated : 02 Jan 2021 03:25 AM

திண்டுக்கல் அருகே இறந்த பெண் போலீஸ் உடலை வைத்து பிரார்த்தனை செய்த இருவர் கைது

திண்டுக்கல்லில் இறந்த பெண் போலீஸின் உடலை உயிர்த்தெழ செய்வதாகக் கூறி வீட்டில் வைத்து 3 நாட்களுக்கு மேலாக பிரார்த்தனை செய்த அவரது சகோதரி உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி டிரசரி காலனியை சேர்ந்தவர் அன்னை இந்திரா(38). கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் வாழ்ந்த வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இவரது சகோதரி வாசுகி(43), குடும்ப நண்பர் சுதர்சன்(47) ஆகியோர் இறந்த அன்னை இந்திராவின் உடலை அடக்கம் செய்யாமல் வீட்டிலேயே வைத்து உயிர்த்தெழச் செய்யப்போவதாகக் கூறி பிரார்த்தனை செய்து வந்துள்ளனர்.

பணிக்கு வராத அன்னை இந்திராவை தேடிச்சென்ற போலீஸாருக்கு இந்த சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அன்னை இந்திரா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உரிய சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்தது, இறந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல் வீட்டில் வைத்து பிரார்த்தனை செய்தது ஆகியவற்றிற்காக வாசுகி, சுதர்சனத்தை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x