பாளை. பெருமாள்புரத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

பாளை. பெருமாள்புரத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு
Updated on
1 min read

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு பிரார்த்தனைக்காக தேவாலயம் சென்றிருந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டு கதவை உடைத்து 40 பவுன் நகைகளை திருடியவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

பெருமாள்புரம் தாவீது ராஜாநகரை சேர்ந்தவர் மனோகரன் (60). இவர், புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனைக்காக நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள தேவாலயத்துக்கு சென்றிருந்தார். பிரார்த்தனை முடிந்து வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான 40 பவுன் நகைகள் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த பெருமாள்புரம் போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர். திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in