Published : 29 Dec 2020 03:15 AM
Last Updated : 29 Dec 2020 03:15 AM

துபாயில் இருந்து வந்த இளைஞருக்கு கரோனாபிரிட்டனின் புதிய வகை வைரஸா என ஆய்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்த 38 வயது இளைஞர். இவர் துபாயிலிருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரை வந்தார். அவருக்கு விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு கரோனா வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரிட்டனின் புதிய வைரஸ் தொற்று பாதிப்புள்ளதா எனக் கண்டறிய அவரது ரத்த, சளி மாதிரி சேகரிக்கப்பட்டு புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது மருத்துவமனை மற்றும் வீடுகளில் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x