ரூ.3,500 லஞ்சம் வாங்கிய நகராட்சி வரி வசூலிப்பவர் கைது

ரூ.3,500 லஞ்சம் வாங்கிய  நகராட்சி வரி வசூலிப்பவர் கைது
Updated on
1 min read

திருச்செங்கோடு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது வீட்டுக்கு வரி அதிகமாக உள்ளதாகவும், அதனை குறைத்து தரவேண்டும் என நகராட்சி வரி வசூல் செய்யும் பணியாளர் ஆனந்தகுமாரிடம் (23) முறையிட்டுள்ளார். இதற்கு ரூ.5 ஆயிரம் தந்தால் வரியை குறைத்து தருவதாக ஆனந்தகுமார் உறுதியளித்துள்ளார். இதில் முதல் தவணையாக ரூ.3, 500 வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

லஞ்சம் தர மனமில்லாத சண்முகம், லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் அளித்த ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று காலை திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வரிவசூல் மையத்தில் இருந்த ஆனந்தகுமாரிடம், சண்முகம் வழங்கியுள்ளார். அதனை ஆனந்தகுமார் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையிலான போலீஸார் அவரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in