டிசம்பர் 29-ல் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

டிசம்பர் 29-ல் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிச.29-ல் விவசாயிகள் குறை தீர்வுக் கூட்டம் நடைபெற உள்ளது என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வுக் கூட்டம் டிசம்பர் 29- ம் தேதி (நாளை மறுதினம்) நடைபெற உள்ளது.

அன்றைய தினம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வேளாண் உதவி இயக்குநரிடம் விவசாயிகள் நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம். இதில், பெறப் படும் மனுக்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in