போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்குக

போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்குக
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பாட்டாளி தொழிற்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் விழுப்புரத் தில் நடைபெற்றது. கடலூர் மண்டல சிறப்பு தலைவர் ஜெயசங்கர்தலைமை தாங்கினார். மாநகரபோக்குவரத்துக்கழக வடக்கு மண்டல பொதுச்செயலாளர்ராஜேந்திரன், தெற்கு மண்டல பொதுச்செயலாளர் சிவக்குமார், கடலூர் மண்டல பொதுச் செயலாளர் ராஜமூர்த்தி, திருச்சி மண்டலதலைவர் ஆணைமுத்து ஆகியோர்பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்க ளாக்க வேண்டும்.

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in