சுரண்டையில் இளம்பெண் கொலை

சுரண்டையில் இளம்பெண் கொலை
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேல கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த வேல்சாமி என்பவரது மகள் பூங்கோதை(20). இவர், திருப்பூரில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது, உடன் வேலை பார்த்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

திருப்பூரில் வேலை இல்லாததால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவருடன் சுரண்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலையில் பூங்கோதையின் வீடு பூட்டியிருந்தது. வீட்டுச் சாவி வெளிப்பக்கமாக இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீட்டுக்குள் பூங்கோதை சடலமாகக் கிடந்தார். அவரது கணவர் வீட்டில் இல்லை.

சுரண்டை போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பூங்கோதையின் கணவர் ஜோகிந்தரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in