கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் விற்பனை அதிகரிப்பு

கருங்கல்பாளையம் சந்தையில்  மாடுகள் விற்பனை அதிகரிப்பு
Updated on
1 min read

அரசின் விலையில்லா கறவை மாடுகள் வாங்கும் திட்டத்தில் மாடுகளை வாங்க வெளி மாவட்டங்களில் இருந்து பெண்கள் வந்ததால், கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் விற்பனை அதிகரித்தது.

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் நேற்று ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தில் இருந்து 800 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம், அருப்புக்கோட்டை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கால்நடை பாரமரிப்பு துறை அதிகாரிகள் முன்னிலையில் கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர்.

இதுதொடர்பாக மாட்டுசந்தை நிர்வாகிகள் கூறும்போது, இந்த வாரம் கூடிய சந்தையில் பசு-450, எருமை-250, கன்று-100 என 800 மாடுகள் கொண்டு வரப்பட்டது. இதில், பசு மாடு ரூ.30ஆயிரம் முதல் ரூ.70ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், கன்று ரூ.10ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டன. தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தின் கீழ் மாடுகளை வாங்க கால்நடைத்துறையினரும், பயனாளிகளும் வந்ததால் 90 சதவீத மாடுகள் விற்பனையாயின, என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in