புதிய பாலத்தை போக்குவரத்துக்கு திறக்க வலியுறுத்தல்

புதிய  பாலத்தை போக்குவரத்துக்கு திறக்க  வலியுறுத்தல்
Updated on
1 min read

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலியில் மழையில் சேதமான சாலைகளை சீர்செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தாமிரபரணி புதிய மேம்பாலத்தை போக்கு வரத்துக்கு திறக்க வேண்டும். மாநகர் முழுவதும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி, மாடுகளைத் திரிய விடும் நபர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மாநகர மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எ.கனி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் முகம்மது காசிம் வரவேற்றார். செயலாளர் முஸ்தபா, துணைத் தலைவர் சாகுல் ஹமீது, பொதுச் செயலாளர் ஹயாத் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்னத்துல்லா நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in