சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்
Updated on
1 min read

கடலூரில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு கூட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மூசா,உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும். புயல் மழை யால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், சேதமடைந்த சாலைகளைசீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து வரும் 25, 26-ம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் மக்களை சந்தித்து துண்டுப்பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்வது என கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in