கடலூர் மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 1,256 பேர் கண்காணிப்பு

கடலூர் மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து  வந்த 1,256 பேர் கண்காணிப்பு
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்துக்கு வெளிநாடு களில் இருந்து வந்த 1,256 பேர் தொடர்ந்து சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின் றனர்.

இங்கிலாந்தில் புதிய வகை வீரிய மிக்க கரோனா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கண் காணித்து தனிமைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 16-ம் தேதி முதல் பல்வேறு நாடுகளில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு 1,256 பேர் வந்துள்ளனர். இவர்களை கண்டறிந்து 14 நாட்கள்தனிமை படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடு பட்டுள்ளனர். இவர்களை தனிமைப்படுத்தி, அவர்களின் ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக கடலூர் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) செந்தில்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in