பெண்களின் சிறந்த சேவைக்காக மார்ச் 8-ல் அவ்வையார் விருது 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

பெண்களின் சிறந்த சேவைக்காக மார்ச் 8-ல் அவ்வையார் விருது 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
Updated on
1 min read

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதல்வரால், வரும் மார்ச் 8- ம் தேதி உலக மகளிர் தினவிழாவில், “அவ்வையார் விருது”வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.

இவ்விருதுக்கு, தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட 18 வயது மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை,மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

இதுதொடர்பாக வரும் 28-ம் தேதிக்குள் மாவட்ட சங்மூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in