Published : 23 Dec 2020 03:17 AM
Last Updated : 23 Dec 2020 03:17 AM

வாக்காளர் பட்டியலில் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக டிச.15-ம் தேதி வரை நடைபெற்ற முகாம்கள் மூலமாக பெறப்பட்ட விண்ணப் பங்கள் https://pudukkottai.nic.in எனும் மாவட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. மேலும், கோட்டாட் சியர் அலுவலக தகவல் பலகை யிலும் இந்தப் பட்டியல் ஒட்டப் பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், கந்தர் வக்கோட்டை, புதுக்கோட்டை, ஆலங்குடி மற்றும் திருமயம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை கோட்டாட்சியரிடமும், அறந்தாங்கி தொகுதியைச் சேர்ந்தவர்கள் அறந்தாங்கி கோட்டாட்சியரிடமும், விராலிமலை தொகுதியைச் சேர்ந்தவர்கள் இலுப்பூர் கோட்டாட்சியரிடமும் வரும் ஜன.14-ம் தேதிக்குள் மனுவாக அளிக்கலாம் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x