1.42 கிலோ தங்கம் பறிமுதல்

1.42 கிலோ தங்கம் பறிமுதல்
Updated on
1 min read

துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று திருச்சிக்கு வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல்ரசாக்(40) என் பவர் தனது ஆடைகளுக்குள் மறைத்து 1.173 கிலோ எடை யுள்ள தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

அதேபோல சிங்கப்பூரி லிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்தவர்களை சோத னையிட்டபோது, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(34) என்ப வர் சூட்கேசில் மறைத்து 249 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை விமானநிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 1.422 கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.72.92 லட்சம் இருக்கும் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in