சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை திட்டக்குடி இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை திட்டக்குடி இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
Updated on
1 min read

திட்டக்குடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு சென்னையில் பதுங்கி இருந்த இளைஞரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தைச் சேர்ந் தவர் சசிக்குமார் ( 29). இவர், அவரது உறவினரான 17 வயது சிறுமியை மிரட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி கர்ப்ப மடைந்தார். இதையறிந்த பெற் றோர், சிறுமியிடம் கேட்டபோது நடந்த சம்பவம் குறித்து கூறினார். இதற்கிடையே சசிகுமார் வெளிநாடு வேலைக்கு சென்று விட்டார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த சிறுமிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய சசிக்குமார் ஊருக்கு செல்லாமல் கடந்த 2 மாதமாக சென்னையில் தங்கியிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சென்னை சென்று போக்கோ சட்டத்தில் சசிக்குமாரை நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in