பாலியல் வழக்கில் ஆசிரியர் கைது

பாலியல் வழக்கில் ஆசிரியர் கைது
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மன்மதராஜ் (35). இவர், குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது.

இவர் வேலை பார்க்கும் பள்ளியில் கடந்த 2017-ம் ஆண்டு படித்த மாணவி,தற்போது நர்ஸிங் முடித்துள்ளார். குற்றாலம் பூங்காவுக்கு வந்த அந்த பெண்ணைஎதேச்சையாக மன்மதராஜ் சந்தித்துள்ளார். அப்போது, பேசிக் கொண்டிருந்தமன்மதராஜ், அப்பெண்ணுக்கு பாலியல்தொல்லை அளித்துள்ளார். புகாரின்பேரில் குற்றாலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மன்மதராஜை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in