Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

விக்கிரவாண்டி அருகே ஆற்றில் மாயமான மாணவன் உடல் மீட்பு

விக்கிரவாண்டி அடுத்த தொரவிபகுதியைச் சேர்ந்தவர் பழனி மகன் தமிழ்வேந்தன் (18). இவர்பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்நண்பர்களுடன் வராக ஆற்றில்குளிக்க சென்றார். நெடுநேரமாகி யும் அவர் கரை திரும்பவில்லை. அவர் ஆற்றில் அடித்துச் செல் லப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸார் மற்றும் விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் கடந்த இரு தினங்களாக மாயமான மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந் நிலையில், தமிழ்வேந்தன் குளிக் கச் சென்ற இடத்திலிருந்து சுமார் 50 அடி தொலைவில் அவரது உடல் நேற்று அதிகாலை மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x