தொடர் விபத்தால் சாலைப் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

தொடர் விபத்தால் சாலைப் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
Updated on
1 min read

அரியலூர் அருகே நடைபெற்று வரும் சாலைப் பணியால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகக் கூறி பணி நடைபெறும் இடத்தை மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி கள் தற்போது நடைபெற்று வரு கின்றன. இதில் வி.கைகாட்டியில் நடைபெறும் பணிக்காக உயர் மட்ட பாலத்தின் கீழ் வாகனங் கள் செல்லும் வகையில் போக்கு வரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.

பாலத்தின் உள்ளே புகுந்து வெளியே வரும்போது மறுபுறத் தில் வரும் வாகனங்கள் தெரியாத தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, வாகனங்கள் சென்றுவர முறை யான பாதை அமைத்து தரக் கோரி, அப்பகுதி மக்கள் நேற்று சாலைப்பணியை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர்.

தகவலறிந்து வந்த நெடுஞ் சாலை அதிகாரிகள் மற்றும் கயர்லாபாத் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in