Published : 20 Dec 2020 03:15 AM
Last Updated : 20 Dec 2020 03:15 AM

வாய்க்காலை சீரமைக்கக் கோரி ஆட்சியர், எம்எல்ஏக்களை முற்றுகையிட்ட மக்கள்

பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் நேற்று தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்கள்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே வரத்து வாய்க்காலை சீரமைக்கக்கோரி மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக் களை கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடியில் நீர்த்தேக்கத் திலிருந்து விவசாய பயன்பாட் டுக்கு, தண்ணீரை திறந்துவிடும் நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா, எம்எல்ஏக்கள் குன்னம் ஆர்.டி.ராமச் சந்திரன், பெரம்பலூர் இரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் நேற்று அங்கு சென்றனர்.

இதையறிந்த, அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100-க் கும் மேற்பட்ட பொதுமக்கள், வரத்து வாய்க்கால்களை தூர் வாராததால் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் அன்னமங்கலம் ஏரி உள்ளிட்ட இதரபகுதிகளுக்கு செல்வதில்லை. எனவே, ஏரிக்குச் செல்லும் வரத்து வாய்க்காலை தூர் வார வேண்டும் என வலியு றுத்தி மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அன்னமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வரும் வகையில் வரத்து வாய்க்காலை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் மாவட்ட ஆட் சியர் உறுதியளித்ததை தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x