திருவாதிரை விழா நடத்த வலியுறுத்தல்

திருவாதிரை விழா நடத்த வலியுறுத்தல்
Updated on
1 min read

தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.ராஜேந்திரன் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயில் துணை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சங்கரன்கோவில் சங்கரநாரா யண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இதேபோல் வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பும் முக்கிய விழாவாகும். திருவாதிரை திருவிழா ஆகம விதிப்படி தொடங்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டது.

திருவாதிரை திருவிழாவை கொடியேற்றத்துடன் தொடங்க வேண்டும். சுவாமி வீதி உலா வருவதையும் அனுமதிக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு விழாக்களை நடத்தவும், இந்த விழாக்களில் பக்தர்களை அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in