போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

திருக்குறுங்குடியைச் சேர்ந்தவர் செ.நம்பிராஜன் (52). இவர், கடந்த 2017-ம் ஆண்டு பள்ளிகளுக்கு செல்லும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, நம்பிராஜனை கைது செய்தனர். இவ்வழக்கு திருநெல்வேலியில் உள்ள மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்து நம்பிராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி இந்திராணி தீர்ப்பு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in