வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி சமூக நீதிப் பேரவை ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சோமரசம்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பேரணியாகச் செல்லும் சமூக நீதிப் பேரவை உள்ளிட்ட அமைப்பினர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சோமரசம்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பேரணியாகச் செல்லும் சமூக நீதிப் பேரவை உள்ளிட்ட அமைப்பினர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, திருச்சி சோமரசம் பேட்டையில் சமூக நீதிப் பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியு றுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சோமர சம்பேட்டை எம்ஜிஆர் சிலை அருகே சமூக நீதிப் பேரவையின் மாவட்டத் தலைவர் அ.ரவிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. முன்னதாக, கோனார்சத் திரம் பகுதியில் இருந்து எம்ஜிஆர் சிலை வரை மாட்டு வண்டி மற் றும் டிராக்டர்களிலும், நடை பயணமாகவும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு விவசாயிகள் ஊர் வலம் சென்றனர்.

தமிழக விவசாயிகள் சங்கம், மக்கள் அதிகாரம், காவிரி உரிமை மீட்புக் குழு, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம், திவிக, தபெதிக, தமிழ்ப் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in