தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
Updated on
1 min read

மேலப்பாளையம் மண்டல அலுவலகம் மற்றும் பெருமாள் புரம் வார்டு அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

சுகாதார ஆய்வாளர்கள் சங்கரநாராயணன், சங்கரலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். `தொழிலாளர்களிடம் அத்துமீறி எவ்வித நடவடிக்கைகளும் இருக்காது. பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது’ என்று உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, 2 மணி நேரத்துக்குப்பின் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in