பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்
Updated on
1 min read

திருநெல்வேலியில் பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி வண்ணார் பேட்டை பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத் தில் நடைபெற்ற இந்த போராட் டத்துக்கு பிஎஸ்என்எல் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆண்டபெருமாள் தலைமை வகித்தார். நிர்வாகி சங்கரநாராயணன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கணேசன் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். 4-ஜி சேவையை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்க ளை பணிநீக்கம் செய்யக்கூடாது. ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிறுத்தப்பட்ட ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்டச் செயலாளர் சூசைமரிய அந்தோணி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in