Published : 17 Dec 2020 03:18 AM
Last Updated : 17 Dec 2020 03:18 AM

ராணிப்பேட்டை பாலாற்றில் தவறி விழுந்த வேன் ஓட்டுநர் உடல் 18 நாட்களுக்கு பிறகு மீட்பு

ராணிப்பேட்டை அருகே பாலாற் றில் தவறி விழுந்த இளைஞர் 18 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டார்.

ராணிப்பேட்டை வண்டிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் சரத்குமார் (23). இவர், கடந்த மாதம் 29-ம் தேதி பாலாற்றங்கரையோரம் உள்ள தகனமேடையில் தனது நண் பர்களுடன் பேசிக் கொண்டி ருந்தார். அப்போது, செல்போன் அழைப்பு வந்ததால் அங்கிருந்து புறப்பட்டு சென்றபோது பாலாற் றில் தவறி விழுந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாலாற்றில் இறங்கி அவரை தேடினர். அவர் கிடைக்காததால் கடந்த 5-ம் தேதி தேடும் பணியை கைவிட்டனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை சங்கர்நகர் பகுதி பாலாற்றில் ஆண் உடல் மிதப்பதாக காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில், நேற்று முன்தினம் மாலை காவல் துறையினர், அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் ஆற்றில் மூழ்கிய வேன் ஓட்டுநர் சரத்குமார் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, 18 நாட் களுக்குப் பிறகு சரத்குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x