Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வேல்முருகன் ஆஜர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு தொடர்பாக கடந்த 2018 ஏப்ரல் 1-ம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேல்முருகன் உள்ளிட்ட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் நேற்று வேல்முருகன் உள்ளிட்ட 11 பேர் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் சண்முகநாதன் முன்னிலையில் ஆஜராயினர். வழக்கை விசாரித்த நடுவர் ஜனவரி 5- ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x