Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

மின் இணைப்புக்கு லஞ்சம்உதவி செயற்பொறியாளர் கைது

பூமிநாதன்

சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே பரமதேவன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பாண்டி (30). இவரது தாயார் வசிக்கும் பழைய வீடு மின் இணைப்பு இல்லாமல் இருந்தது. இதற்காக கடந்த 3-ம் தேதி சின்னமனூர் பொன்னகரம் மின்வாரிய அலுவலகத்தில் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்.

இது குறித்து உதவி செயற்பொறியாளர் பூமிநாதன் (51) ரூ. 3ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மறுநாள் பணம் தருவதாக கூறிச் சென்ற சின்னப்பாண்டி தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனையின்படி நேற்று மாலை லஞ்சப் பணத்தை பூமிநாதனிடம் கொடுத்துள்ளார். அப்போது மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்தியசீலன், ஆய்வாளர்கள் கண்ணன், கீதா ஆகியோர் அலுவலகத்துக்குள் சென்று திடீர் சோதனை நடத்தினர். இதில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டு பூமிநாதன் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x