Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM

இளைஞரை மிரட்டி பணம் பறித்த ரவுடிகள் கைது

மதுரை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள எம்.கே.புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (25). இவர் கடந்த 13-ம் தேதி மெட்டல் கடை அருகே சென்றார். அப்போது அவரை வழிமறித்த இருவர் கத்தி முனையில் மிரட்டி ரூ. 1,350-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக புகாரின் பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் விசாரணை நடத்தி ஜீவா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (30), மொட்டை மணி (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், ரவுடிகள் பட்டியலில் இருப்பதாகவும் போலீஸார் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x