அரவக்குறிச்சியில் திமுக இன்று பிரச்சாரம் தொடக்கம்

அரவக்குறிச்சியில் திமுக இன்று பிரச்சாரம் தொடக்கம்
Updated on
1 min read

திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று (டிச.15) தொடங்குகிறது. வேலம்பாடி ஊராட்சி அண்ணா நகரில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரம் தொடங்குகிறது. இதில் விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி சிறப்புரையாற்றுகிறார்.

தொடர்ந்து, பள்ளபட்டியில் உலமாக்கள், சின்னதாராபுரத்தில் அமராவதி பாசன விவசாயிகள், புன்னம்சத்திரத்தில் 100 நாள் வேலை பணியாளர்கள், வேலாயுதம்பாளையத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தொழிலாளர்கள், தளவாபாளையத்தில் விவசாயிகள் சந்திப்பு நடைபெறுகிறது என திமுக கரூர் மாவட்டப் பொறுப் பாளரும், அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in