Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM

3 வேளாண் சட்டங்களை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை கண்டித்தும், விவசாயி களுக்கு ஆதரவாகவும் ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 145-க்கும்மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக புது டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் முற்றுகைப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறை யினர் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டனர்.

போராட்டக் குழு ஒருங்கிணைப் பாளர் மகாலிங்கம் தலைமையில் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, கோபி உட்பட 30-க்கும் மேற்பட்டோர் ஆஞ்சநேயர் சிலை அருகே இருந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்க மிட்டவாறு ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை, காவல் துறையினர் தடுத்தபோது, சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் எதிரே மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. எல்.சி. மணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் பி.என்.உதயகுமார் உள்ளிட்டோர் வேளாண் சட்டங்களை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 35-க்கும் மேற்பட் டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற காத் திருப்புப் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் முல்லை தலைமை வகித்தார். இதில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் நகர காவல் துறையினர் காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி 2 பெண்கள் உட்பட 40 பேரை கைது செய்தனர்.

காட்பாடி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண் சட்டங்களை எதிர்த்தும், புதுடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதர வாகவும் தமிழ் புலிகள் கட்சியினர் காட்பாடியில் ரயில் மறியல் போராட்டத்தை நேற்று அறிவித்தனர். இதையடுத்து, காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலா வள்ளுவன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 20-க்கும்மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x