வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தில் வசித்தவர் ஐயப்பன்(28). இவர், கஸ்தம்பாடியில் இருந்து போளூருக்கு நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

வடமாதிமங்கலம் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, ஆரணி நோக்கி எதிர் திசையில், ஆரணி கொசப்பாளையம் பங்களா வீதியில் வசிக்கும் ராகவன்(54) என்பவர் ஓட்டி வந்த மற்றொரு இரு சக்கர வாக னம் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து களம்பூர் காவல் துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in