விவசாயிகளின் போராட்டத்துக்கு விசைத்தறி தொழிலாளர் ஆதரவு

விவசாயிகளின் போராட்டத்துக்கு விசைத்தறி தொழிலாளர் ஆதரவு
Updated on
1 min read

பள்ளிபாளையம் சிஐடியு சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் பி.முத்துசாமி தலைமை வகித்தார். விவசாய சங்கத்திற்கு ஆதரவாக வரும் நாட்களில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து போராடும். திருச்செங்கோடு கைலாசம்பாளையத்தில் தம்பதி தற்கொலை தொடர்பான வழக்கில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.சந்திரன், பொருளாளர் எம்.அசோகன், மாநில உதவி செயலாளர் கே.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in