புதூர் மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை பால் குட ஊர்வலம்

புதூர் மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை  பால் குட ஊர்வலம்
Updated on
1 min read

போகனப்பள்ளியில் புதூர் மாரியம்மன் கோயில் மண்டல பூஜையையொட்டி பால் குடம் ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ணகிரி அடுத்த போகனப் பள்ளியில் எழுந்த ருளியுள்ள புதூர் மாரியம்மன் கோயில், விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 20-ம் தேதி நடந்தது. விழாவைத் தொடர்ந்து மண்டல பூஜை நடந்தது.

பூஜையினையொட்டி போகனப்பள்ளி அருகில் பால் குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அங்கிருந்து, சேவாட்டம், காளி வேஷம் அணிந்தவர்களின் நடனத்துடன் பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக புதூர் மாரியம்மன், முத்துராயன், விநாயகர்,பெருமாள் கோயில்களுக்குச்சென்றனர். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் போகனப் பள்ளி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in