தி.மலை மாவட்டத்தில் லோக் அதாலத்தில்978 வழக்குகளுக்கு தீர்வு

தி.மலை மாவட்டத்தில் லோக் அதாலத்தில்978 வழக்குகளுக்கு தீர்வு
Updated on
1 min read

தி.மலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் 978 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில், தி.மலை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் லோக் அதாலத் நேற்று நடை பெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் பணியை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான திருமகள் தொடங்கி வைத்தார்.

இதில், சாலை விபத்து, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு, வீடு மற்றும் குடிநீர் வரி, தொழிலாளர் நலன், இழப்பீடு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டது.

4,703 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 978 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 4,13,08,407 ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in